12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

காஸா குறித்த அவதூறு பதிவு! பிரபல இயக்குநருக்கு வலுக்கும் கண்டனம்!

பிரபல பாலிவுட் இயக்குநரின் கருத்துக்கு கண்டனம் வலுத்து வருகின்றது...

இயக்குநர் ராம் கோபால் வர்மா (கோப்புப் படம்) - படம் - PTI

Published On :

காஸா குறித்து பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட அவதூறு பதிவுக்கு, ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய “சிவா”, “சத்யா” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகின்றார்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்று காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் சந்திக்கும் வன்முறைகளைக் கேலி செய்யும் விதமாக அவர் வெளியிட்ட பதிவு மிகவும் விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

கடந்த, அக்.20 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “இந்தியாவில் ஒரு நாள் மட்டுமே தீபாவளி, காஸாவில் எல்லா நாளும் தீபாவளி” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து, ஏராளமான இணையவாசிகள் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த, 2022 ஆம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட அவதூறு பதிவுக்கு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Internet users are condemning famous Bollywood director Ram Gopal Varma for his defamatory post about Gaza.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.