மகாராஷ்டிரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: சஞ்சய் ராவத்

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சஞ்சய் ராவத்தின் விமர்சனம்..
சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கவனம் செலுத்தவில்லை என்றும் சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ராவத் கூறியதாவது,

மாநிலத்தில் சட்டத்திற்கு எந்த பயமும் இல்லை, ஃபட்னவீஸ் தலைமையிலான அரசு உணர்ச்சியற்ற முறையில் செயல்படுகிறது என்று அவர் கூறினார்.

சதாராவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதையும், மும்பையில் அவரது முன்னாள் காதலனால் 24 வயது பெண் கொலை செய்யப்பட்டதையும் அடுத்து மாநிலங்களை எம்பியின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை, பெண்கள் பாதுகாப்பு குறித்து தேவேந்திர ஃபட்னவீஸ் கவனம் செலுத்தவில்லை. எதிர்க்கட்சிகளுடன் அரசியல் செய்வதிலும், அவர்களுக்கு எதிராகப் பேசுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களைக் கண்காணிப்பில் வைத்திருப்பது, அவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது மற்றும் அவர்களுக்குப் பின்னால் காவல்துறையினரை நிறுத்துவது போன்ற செயல்களில் ஃபட்னவீஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

கட்சியின் ஊழியர்களாக காவல்துறையினர் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இதுபோன்ற சம்பவங்கள் (வன்முறை தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார்.

மாநிலத்தில் பெண் காவல்துறை இயக்குநர் இருந்தபோதிலும், இதுதான் நிலைமை என்று அவர் டிஜிபி ரஷ்மி சுக்லாவைப் பற்றிக் குறிப்பிட்டார்.

உள்துறை மலைப்பாம்பு போல அசையாமல் கிடக்கிறது, நிர்வாகத்தின் மீது அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று ராவுத் கூறினார்.

Summary

Chief Minister Devendra Fadnavis of not paying attention to the law and order situation in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com