எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மோந்தா புயல்! ஒடிசாவில் 3,000 பேர் வெளியேற்றம்; நடவடிக்கைகள் தீவிரம்!

மோந்தா புயலால் ஒடிசாவில் 3,000-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்...

News image
கோப்புப் படம்
Updated On :28 அக்டோபர் 2025, 7:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

மோந்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தீவிரப் புயலாக மாறியுள்ள மோந்தா புயல், இன்று (அக். 28) வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இந்தப் புயலானது இன்று மாலை அல்லது இரவு ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால், வட தமிழகம், ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோந்தா புயலின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மல்கங்கிரி, கோராபுட், ராயகடா, கஞ்சம், கஜபதி, கந்தமால், கலஹண்டி மற்றும் நபரங்பூர் ஆகிய 8 மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிசா அரசு மேற்கொண்டு வருகின்றது.

இதுபற்றி, ஒடிசாவின் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறியதாவது:

“மோந்தா புயலின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்களில் ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்புப் படை ஆகிய படைகளின் 140 குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.

தெற்கு ஒடிசாவில், சுமார் 3,000-க்கும் அதிகமானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, 1,445 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் 32,528 பேரை வெளியேற்ற அரசு திட்டமிட்டு வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

summary

As Cyclone Monsoon intensifies, more than 3,000 people have been evacuated from their homes in the state of Odisha as a precautionary measure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.