உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

5 ஜி சேவையை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

மாதிரிப் படம்

Published On :

கம்பிவட இணைப்பற்ற 5 ஜி சேவைகளை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜியோ நிறுவனம் அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாகவும், இதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல் போன்றவை உள்ளன. தற்போது, கம்பி இணைப்பற்ற 5 ஜி சேவையை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் அதிக பயனர்களைக் கொண்டு ஜியோ முன்னிலை வகித்து வருகிறது.

2025 ஜூலை நிலவரப்படி, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், ஜி யோ நிறுவனம் கம்பிவடமற்ற 5 ஜி இணைப்பில் 3,37,789 பயனர்களைக் கொண்டுள்ளது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனம் 2,11,072 கம்பிவடமற்ற 5 ஜி பயனர்களைக் கொண்டுள்ளது.

எனினும் மாதாந்திர பயனர்களின் விகிதத்தில் ஜூலை நிலவரப்படி ஏர்டெல் நிறுவனம் 12.12% பயனர்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆனால் ஜியோ நிறுவனம் 5.53% பயனர்களை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. பெரும்பாலான பயனர்கள் ஏர்டெல் சேவையை விரும்புவதை இந்தத் தரவுகள் குறிப்பிடுகின்றன.

எனினும், ஒட்டுமொத்தமாக இதுவரை 64.45 லட்சம் 5 ஜி பயனர்களை ஜியோ நிறுவனம் கொண்டுள்ளது. ஆனால், ஏர்டெல் நிறுவனம் 19.53 லட்ச பயனர்களை மட்டுமே கொண்டுள்ளது. (ஜூலை 2025 நிலவரம்)

தொலைத்தொடர்பு சேவையில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்வதாகவும், பிரீமியம் 5 ஜி பயனார்கள் கொண்ட சந்தையை ஆக்கிரமிப்பதையே இரு நிறுவனங்களும் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ நிறுவனம் 50.62% சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ளது. இதேகாலகட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் 31.18% பங்குகளை மட்டுமே கொண்டுள்ளது. எஞ்சிய 18% பங்குகள் பிஎஸ்என்எல், வோடாஃபோன் - ஐடியா போன்ற மற்ற நிறுவனங்கள் கொண்டுள்ளன.

Summary

Jio Continues to Lead 5G FWA Subscriber Addition in India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.