குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ராகுல் காந்தி வாக்களித்தார்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தது பற்றி...
ராகுல் காந்தி
ராகுல் காந்திPTI
Published on
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான வாக்குப் பதிவு இன்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கியது.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனா்.

இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியவுடன் முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்களும் எம்பிக்களும் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோர் தங்களின் வாக்கைப் பதிவு செய்தனர்.

மாலை 5 மணி வரை இந்த வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Summary

Vice President election polling underway today, Lok Sabha Opposition Leader Rahul Gandhi has cast his vote.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com