மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!

பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் குறித்து ஒடிசா முதல்வரின் கருத்து..

News image

ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி

Updated On :13 செப்டம்பர் 2025, 7:23 am

பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்று என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார்.

மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இந்த மாநிலங்களில் மொத்தம் ரூ. 71,850 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.

இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியின் எக்ஸ் பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு விரைவான மாற்றத்தின் சகாப்தத்தை கண்டு வருகிறது. பிரதமரின் 5 மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்றாகும்.

திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டுவது உள்ளடக்கிய விக்சித் பாரத் மீதான உறுதியான உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

இந்த முயற்சிகள் உள்கட்டமைப்பை அதிகரிக்கும், இணைப்பை வலுப்படுததும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை திறப்பு விழாவுடன் மிசோரம் முதல் முறையாக இந்திய ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது, இது வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று மைல்கல், தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்பின் அடையாளமாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற ஒவ்வொரு முயற்சியிலும் இந்தியா வலிமையானது, ஆத்மநிர்பர் வளமானது என்ற தொலைநோக்குப் பார்வையை நெருங்கிறது என்று அவர் கூறினார்.

Summary

Odisha Chief Minister Mohan Charan Majhi on Saturday said Prime Minister Narendra Modi's five-state visit to Mizoram, Manipur, Assam, West Bengal and Bihar is "a testament to the scale and speed of progress across the nation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.