கேரள கடற்கரையில் மீனவர் வலையில் சிக்கிய பாம்பு சிலைகள்!

கேரள கடற்கரையில் மீனவர் வலையில் 2 பாம்பு சிலைகள் சிக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

கேரள கடற்கரையில் மீனவர் வலையில் 2 பாம்பு சிலைகள் சிக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம், அழிக்கோடு அருகேயுள்ள புதிய கடப்புரத்தில் வசித்து வருபவர் ரஸ்ஸல். இவர் ஞாயிற்றுக்கிழமை வடக்குப் பகுதியில் கடலுக்குள் சென்றபோது, அவரது வலையில் வழக்கத்திற்கு மாறான ஒன்று சிக்கியது.

அது மீன் அல்ல, அவரது வலையில் இரண்டு பாம்புச் சிலைகள் சிக்கியிருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் ஐந்து கிலோகிராம் எடையும் பித்தளையால் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே தனுர் காவல் நிலையத்திற்கு சிலைகளை எடுத்துச் சென்று ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிலைகள் எப்படி கடலுக்குள் வந்தன என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

பாலஸ்தீன நாடே இருக்காது!! இஸ்ரேல் பிரதமர்

அனைத்து சாத்தியக்கூறுகளையும் நாங்கள் சரிபார்த்து வருகிறோம். அவை திருடப்பட்டிருந்தால், சிலைகளின் உரிமையாளர் இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு தேடி வருவார் என்றார்.

இந்த பொருட்கள் திருடப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

A fisherman in north Kerala had an unusual catch on Sunday not fish, but two serpent idols tangled in his net.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com