வாக்குத் திருட்டு நடைபெறும் வரை வேலையின்மை, ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்: ராகுல்

வேலையின்மை பற்றி ராகுலின் எக்ஸ் பதிவு...
Rahul Gandhi
ராகுல் காந்திகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை, அது வாக்குத் திருட்டுடன் நேரடி தொடர்புடையது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

இதுதொடர்பாக ராகுலின் எக்ஸ் பதிவில்,

இந்தியாவில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை வேலையின்மை, அது வாக்குத் திருட்டுடன் நேரடியாகத் தொடர்புடையது.

ஒரு அரசு பொதுமக்களின் நம்பிக்கையை வென்று ஆட்சிக்கு வரும்போது அதன் முதல் கடமை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதாகும். ஆனால், பாஜக தேர்தல்களில் நேர்மையாக வெற்றி பெறுவதில்லை. அவர்கள் வாக்குகளைத் திருடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆட்சியைத் தக்கவைக்கின்றனர்.

அதனால்தான் வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்ததோடு, ஆள்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்துவிட்டன. இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.

நாட்டின் இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள், கனவு காண்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்காகப் போராடுகிறார்கள். ஆனால் (பிரதமர் நரேந்திர மோடி) பிரபலங்கள் அவரைப் புகழ்ந்து பாட வைப்பதும், கோடீஸ்வரர்கள் லாபம் அடைய செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

இளைஞர்களின் நம்பிக்கைகளை உடைத்து அவர்களை விரக்தியடையச் செய்வது அரசின் அடையாளமாக மாறிவிட்டது. ஆனால் இப்போது, ​​நிலைமை மாறி வருகிறது.

உண்மையான போராட்டம் வேலைகளுக்கு மட்டுமல்ல, வாக்குத் திருட்டுக்கு எதிரானது என்பதை இந்தியாவின் இளைஞர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஏனெனில் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை, ஊழல் தொடர்ந்து உயரும்.

நாட்டின் உச்ச தேசபக்தி என்பது இந்தியாவை வேலையின்மை, வாக்குத் திருட்டிலிருந்து விடுவிப்பதில் உள்ளது என்று அவர் கூறினார்.

இதோடு விடியோ ஒன்றையும் ராகுல் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு பாதியில் வேலை கேட்டுப் போராடும் மாணவர்களை போலீஸார் தடியடி நடத்துவதும், மறுபாதியில் பிரதமர் மோடி மரக்கன்றுகளை நட்டு, மயில்களுக்கு உணவளித்து, யோகா பயிற்சி செய்வது போன்ற தொகுப்பையும் ராகுல் பகிர்ந்துள்ளார்.

Summary

Congress leader Rahul Gandhi on Tuesday claimed that as long as elections are "stolen", unemployment and corruption will continue to rise, and asserted that young people will no longer tolerate "job theft" and "vote theft".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com