பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

விவசாயிகளுக்கு உடனடி உதவியை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு உத்தரவு..

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 12:36 pm IST

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடி உதவியை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டார்.

சோலப்பூர் மாவட்டத்தின் கர்மலா தாலுகாவில் துணை முதல்வர் அஜித் பவார் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

விவசாயிகள் மனம் தளர வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதியளித்தார்.

கடந்த சில நாள்களாக மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியான கனமழை காரணமாகப் பயிர்களுக்குக் குறிப்பிடத்தக்கச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில்,

விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள நான் அவர்களுடன் கலந்துரையாடினேன். சேதம் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகவும் அவர் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உடனடி உதவி சென்றடைவதை உறுதிசெய்ய நிர்வாகம் கவனமாகத் திட்டமிட வேண்டும் மற்றும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகக் கூறினார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக எங்கள் அரசு ஆதரவாகவும் உறுதியாகவும் நிற்கிறது. இதுதொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பவார் கூறினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Summary

Maharashtra Deputy Chief Minister Ajit Pawar on Wednesday directed the administration to ensure immediate assistance to farmers who have suffered crop losses in the recent heavy rains in the state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.