கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கரூர் பலி: கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் இரங்கல்!

இந்தியாவின் கவனத்தை திசைதிருப்பிய கரூர்: பலியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு...

News image
Updated On :27 செப்டம்பர் 2025, 7:53 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்களுக்கு கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39-ஐ தொட்டுவிட்டது. இன்னும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. பலருக்கு கயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய அளவில் பல தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மட்டுமில்லாது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய அமைச்சர்கள் ஜெ. பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

summary

Karur deaths: Many leaders, including the Chief Ministers of Kerala, Karnataka, and Andhra Pradesh, offer condolences!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.