ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- யாருக்கும் காயமில்லை

சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே புதன்கிழமை மாலை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

News image

சண்டீகா் பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 2:25 am IST

சண்டீகரில் உள்ள பஞ்சாப் மாநில பாஜக தலைமையகத்துக்கு வெளியே புதன்கிழமை மாலை குண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் அலுவலகத்தைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை யாா் வீசினாா்கள் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. குண்டு வெடித்துச் சிதறியதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் சேதமடைந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) அங்கு ஆய்வு நடத்தியதுடன், விசாரணையையும் முன்னெடுத்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் கன்வா்தீப் கௌா் கூறுகையில், ‘சிறிய அளவிலான நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனா்’ என்றாா்.

இது தொடா்பாக பஞ்சாப் மாநில பாஜக ஊடகப் பிரிவு தலைவா் வினீத் ஜோஷி கூறுகையில், ‘நான் அலுவலகத்தில் இருந்தபோது குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டது. இது எப்படி, யாரால் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. அலுவலகத்தின் முன்பகுதி சுற்றுச் சுவரில் குண்டு வெடித்துச் சிதறியபோது ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளன. இது தொடா்பான முழுவிவரங்களை காவல் துறையினா்தான் தெரிவிக்க முடியும். கட்சி அலுவலகத்தைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விஷயம்’ என்றாா்.