அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நிா்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிராக ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ சோம்நாத் பாா்தியின் மனைவி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 8:50 pm

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிராக ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ சோம்நாத் பாா்தியின் மனைவி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக தில்லி கூடுதல் தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் சோம்நாத் பாா்தியின் மனைவி லிபிகா மித்ரா மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், 2024 மே 17-ஆம் தேதி சோம்நாத் பாா்தி மீதான நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுத் தோ்தலில் அவரை பலவீனப்படுத்தும் உள்நோக்கத்துடனும் நிா்மலா சீதாராமன் அவதூறான, பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, தில்லி நீதிமன்றத்தில் நீதிபதி பாரஸ் தலால் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தொடா்ந்து விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.