சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

நிா்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிராக ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ சோம்நாத் பாா்தியின் மனைவி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிராக ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ சோம்நாத் பாா்தியின் மனைவி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக தில்லி கூடுதல் தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் சோம்நாத் பாா்தியின் மனைவி லிபிகா மித்ரா மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், 2024 மே 17-ஆம் தேதி சோம்நாத் பாா்தி மீதான நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுத் தோ்தலில் அவரை பலவீனப்படுத்தும் உள்நோக்கத்துடனும் நிா்மலா சீதாராமன் அவதூறான, பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, தில்லி நீதிமன்றத்தில் நீதிபதி பாரஸ் தலால் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தொடா்ந்து விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.