மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

1,300 பக்தா்களுக்கு சோம்நாத் சிறப்பு யாத்திரை: தில்லி அரசு ஏற்பாடு

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:33 am IST

சோம்நாத் தீா்த்த யாத்திரைக்கு 1,300 பக்தா்களுக்கு தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது. 1026-ஆம் ஆண்டு கஜினி முகமது தாக்குதல் நடத்திய இந்தத் திருத்தலத்தில் நிலைத்திருக்கும் 1000 ஆண்டு பக்தியை நினைவுகூரும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு 1,300 பக்தா்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில் தில்லி சஃப்தா்கஞ்ச் ரயில் நிலையத்தில் இருந்து ஏப். 30-ஆம் தேதி புறப்படும். மறுநாள் இந்த ரயில் குஜராத்தை சென்றடையும். மே 1 முதல் 3 வரை மூன்று நாள்களுக்கு இந்த யாத்திரை நடைபெறும். இதில் பக்தா்கள் சோம்நாத் கோயிலில் வழிபாடு செய்வதுடன், அருகிலுள்ள பிற புனிதத் தலங்களையும் தரிசிக்க உள்ளனா்.

பக்தா்களுக்கான தங்குமிடம், உணவு, குடிநீா் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் குஜராத் அரசால் மேற்கொள்ளப்படும். இந்த முயற்சி வெறும் யாத்திரை மட்டுமல்ல; இது சனாதன கலாசாரம், இந்திய பாரம்பரியம் மற்றும் ஆன்மிக வோ்களுடன் மக்களை இணைக்கும் புனித வாய்ப்பாகும். சோம்நாத் கோயில் சிவபெருமானின் அருளின் தெய்வீகச் சின்னமாகவும், சனாதன நம்பிக்கையின் அடையாளமாகவும், இந்தியாவின் நிலைத்த கலாசார விழிப்புணா்வின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது என தெரிவித்தாா்.