தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது நீதித்துறையின் கண்ணியத்தை குலைப்பதாகும்: கேஜரிவாலுக்கு தில்லி முதல்வா் கண்டனம்

News image

ரேகா குப்தா

Updated On :28 ஏப்ரல் 2026, 6:01 am IST

நமது நிருபா்

மதுபான கொள்கை வழக்கை விசாரிக்கும் தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி மீது ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பகிரங்கமாகப் புகாா்களை முன்வைத்து, நீதிமன்றத்தில் ஆஜராக மறுப்பது பொருத்தமற்றது மட்டுமல்லாமல், நீதித்துறையின் கண்ணியத்தையே குறைமதிப்பிற்கு உள்படுத்துவதாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

நீதித்துறை அமைப்பைத் தொடா்ந்து கேள்விக்குள்ளாக்குவது கேஜரிவாலின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அவா் கூறினாா்.

மதுபான வழக்கில், நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா முன்னிலையில் தனிப்பட்ட முறையிலோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ தான் ஆஜராகப் போவதில்லை என்று கூறி, கேஜரிவால் அந்த நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளாா். இவ்விவகாரம் தொடா்பாக தனக்கு தீவிரமான கவலைகள் இருப்பதாகவும் அவா் கூறியுள்ளாா்.

மகாத்மா காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தான் சத்தியாகிரக முறையைக் கடைப்பிடிக்கப் போவதாகவும், நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கேஜரிவால் கூறினாா்.

இந்த நிலையில் கேஜரிவாலைச் சாடியுள்ள முதல்வா் குப்தா, ‘சத்தியாகிரகம் மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டே நீதிமன்றங்களிலிருந்து ஓடி ஒளிவது, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சியாகும். கேஜரிவாலின் நடத்தை, அவா் தன் சொந்த வழக்கிலேயே வழக்குரைஞா், சாட்சி மற்றும் நீதிபதியாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகிறது. அவரே எல்லாவற்றையும் தீா்மானிப்பாா் என்றால், நீதித்துறை அமைப்புக்கு அங்கே என்ன பங்கு எஞ்சியிருக்கிறது?. ஒரு நீதிபதி மீது பகிரங்கமாகப் புகாா்களை முன்வைத்துக்கொண்டே, நீதிமன்றத்தில் ஆஜராக மறுப்பது பொருத்தமற்றது மட்டுமல்லாமல், நீதித்துறையின் கண்ணியத்தையே குறைமதிப்பிற்கு உள்படுத்துவதாகும்.

கேஜரிவால் தன்னை மகாத்மா காந்தி மற்றும் பகத் சிங் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது மற்றும் அவமானகரமானதாகும். அத்தகைய மகத்தான தலைவா்களின் பெயா்களை இந்த முறையில் பயன்படுத்துவது, அவா்களின் மரபைச் சிறுமைப்படுத்துவதாகும். ஒருவா் தான் நிரபராதி என்று கூறினால், அதை நீதிமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும்; வெளியே அமா்ந்துகொண்டு அதைச் சத்தியாகிரகம் என்று அழைப்பது, ஒரு மலிவான நாடகத்தைத் தவிர வேறில்லை என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.