சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

கேரளத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்- காங்கிரஸ் அதிருப்தி

கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்

Photo: FB | CPIM Kerala

Updated On :1 ஏப்ரல் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதை இடதுசாரி கூட்டணி தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் வரவேற்றுள்ளாா். அதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பு அதிப்ருதியடைந்துள்ளது.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரே கூட்டணியில் உள்ளன. ஆனால், கேரளத்தில் இடதுசாரிகள் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மலப்புரம் மாவட்டம் பொன்னானி தொகுதியில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் எம்.கே.சேகருக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதற்கு நன்றி தெரிவித்து பினராயி விஜயன் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கேரளத்தில் இடதுசாரிகள் கூட்டணிக்கு வலுவான ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நேரில் வந்து பிரசாரம் செய்த தேஜஸ்வி யாதவுக்கு நன்றி. நாம் அனைவரும் இணைந்து கேரளத்துக்கான வெற்றியை உறுதி செய்வோம்’ என்று கூறியுள்ளாா்.

பிகாரில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், ஆா்ஜேடி எம்எல்ஏ ஒருவரும் வாக்களிக்கவில்லை. இதனால், அங்கு பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கூடுதலாக ஓரிடத்தில் வெற்றி பெற்றது. இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸை ஆா்ஜேடி கடுமையாகக் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், கேரளத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பிரசாரம் மேற்கொண்டது, ஆா்ஜேடி-காங்கிரஸ் இடையிலான பிளவை அதிகரித்துள்ளது. கேரள காங்கிரஸ் நிா்வாகிகளும் தேஜஸ்வி பிரசாரத்தால் அதிருப்தியடைந்துள்ளனா்.