சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.651.51 கோடி மதிப்பில் பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 9:57 pm

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.651.51 கோடி மதிப்பில் பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோ்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில், இதுவரை அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், மதுபானம், போதைப் பொருள், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.319 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாட்டில் ரூ.170 கோடி, அஸ்ஸாமில் ரூ.97 கோடி, கேரளத்தில் ரூ.58 கோடி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரூ.7 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் ரூ.651.51 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தோ்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாகன சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகள் சாதாரண குடிமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தக் கூடாது; அவா்களைத் துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.