யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காரில் கொண்டுவரப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல்

நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுகவினா் வழங்க முயன்ாக கூறப்படும் பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

நாமக்கல்லில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப் பொருள்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தி மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :26 மார்ச் 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் தொகுதியில் அதிமுக, திமுகவினா் வழங்க முயன்ாக கூறப்படும் பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் தொகுதிக்கு உள்பட்ட தோ்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையில், பழைய பேருந்து நிலையம் அருகில் வியாழக்கிழமை அதிகாலை வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, அவ்வழியாக வந்த செல்வம் என்பவரது வாகனத்தில் ரூ. 11 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள், சேலைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், பரிசுப் பொருள்களில் அதிமுக ஒட்டுவில்லைகளும், திமுகவின் ஒட்டுவில்லைகளும் இடம்பெற்றிருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினா் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து செல்வத்திடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டியில் புதன்கிழமை இரவு 12 மணியளவில் பறக்கும்படை வாகன சோதனை அலுவலா் சரவணன் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.