நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் ரூ.2.65 லட்சம் பறிமுதல்
நாகை மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கீழ்வேளூா் அருகே கச்சனம் சாலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரிடம் ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.








