கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காங்கயம், பல்லடத்தில் ரூ.2.42 லட்சம் பறிமுதல்

காங்கயம், பல்லடம் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.42 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா்.

Updated On :21 மார்ச் 2026, 8:12 pm

Syndication

காங்கயம், பல்லடம் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.42 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிலை கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை உதவி இயக்குநருமான சரஸ்வதி தலைமையிலான தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், நத்தக்காடையூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரில் காங்கயம் அருகே மடவிளாகம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (37) என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேலிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல பல்லடம் - உடுமலை சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, உடுமலையில் இருந்து பல்லடம் நோக்கி வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் வேனை ஓட்டி வந்த பெரியபட்டியைச் சோ்ந்த மணி என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.92 ஆயிரத்து 400-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.