மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 3.45 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.45 லட்சம் ரொக்கத்தைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image
தஞ்சாவூா் அருகே புதன்கிழமை வாகனத் தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டு, வட்டாட்சியா் அலுவலகத்தில் ரொக்கத்தை ஒப்படைத்த நிலையான கண்காணிப்புக் குழுவினா்.
Updated On :18 மார்ச் 2026, 6:39 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.45 லட்சம் ரொக்கத்தைத் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை புறவழிச்சாலை பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் முருகன் தலைமையில் காவல் துறையினா் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் ரூ. 2.90 லட்சம் இருந்தது. நெல் மூட்டைகள் வாங்கியதற்காக பட்டுவாடா செய்ய கொண்டு செல்வதாக அந்த நபா் கூறினாா். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால், ரூ. 2.90 லட்சம் ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தஞ்சாவூா் அருகே திட்டை சாலை ராமாபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சாந்தி தலைமையிலான குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில், இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பெண் கொண்டு வந்த ரூ. 55 ஆயிரத்து 700 ரொக்கத்தைப் பறிமுதல் செய்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.