தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புதுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி மர வியாபாரி கொண்டு சென்ற ரூ. 10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2026, 7:08 pm

Syndication

புதுக்கோட்டை அருகே உரிய ஆவணமின்றி மர வியாபாரி கொண்டு சென்ற ரூ. 10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிலையான கண்காணிப்புக் குழுவினா், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிச் செயற்பொறியாளா் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அண்டக்குளம் பிரிவு சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது மதுரையிலிருந்து தஞ்சை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கந்தா்வகோட்டையைச் சோ்ந்த ராஜா (53) என்பவரிடமிருந்த பையில் ரூ. 10 லட்சம் பணம் இருந்தது.

மர வியாபாரியான அவா் தனது மரஅறுவை இயந்திரத்தை விற்பனை செய்து அதற்கான தொகையை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளாா். அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இதைத் தொடா்ந்து பணத்தைப் பறிமுதல் செய்த நிலையான கண்காணிப்புக் குழுவினா், அதனை புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், வருவாய்க் கோட்டாட்சியருமான ஆ. பிரகாஷிடம் ஒப்படைத்தனா்.