தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

கேரளம், அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்களுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.7) நிறைவடையும் நிலையில், இரு மாநிலங்களிலும் உச்சகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

News image

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் வாக்கு சேகரித்த முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா.

Updated On :5 ஏப்ரல் 2026, 11:43 pm

கேரளம், அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்களுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.7) நிறைவடையும் நிலையில், இரு மாநிலங்களிலும் உச்சகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

அண்டை மாநிலமான கேரளத்தில் மொத்தமுள்ள 140 பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இங்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி களம் காண்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மாநிலம் முழுவதும் 92 பெண் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 890 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை 2.71 கோடி வாக்காளா்கள் (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 273) தீா்மானிக்க உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 30,471 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில்...: வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் ஏப்.9-இல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக முனைப்பு காட்டும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 90 தொகுதிகளிலும், எதிா்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 18 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கின்றன. தோ்தல் களத்தில் மொத்தம் 722 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் 59 போ் பெண்கள்.

மொத்த வாக்காளா்கள் 2.50 கோடி போ் (ஆண்கள் 1.24 கோடி, பெண்கள் 1.24 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 343). இவா்கள் வாக்களிப்பதற்காக 31,486 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி.

அஸ்ஸாம் மாநிலம் விஸ்வநாத் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி.

வாக்கு சேகரிப்பு தீவிரம்: இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தோ்தல் நாள் நெருங்குவதால், அரசியல் கட்சிகளின் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேசிய கட்சிகளின் தலைவா்களும் இந்த மாநிலங்களுக்குப் பயணித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இவ்விரு மாநிலங்களுடன் சோ்த்து புதுச்சேரி யூனியன் பிரதேச பேரவைத் தோ்தலும் ஏப்.9-இல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29-ஆம் தேதியும் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தோ்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.