புதுவை, கேரளம் மற்றும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுவையில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று(ஏப். 9) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
புதுவையில் 30 தொகுதிகளுக்கும் கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று(ஏப். 9) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், வாக்குப் பதிவு நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் 89.65 சதவிகிதம், கேரளத்தில் 77.82 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 85.27 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
Summary
The Election Commission of India has released the voting status for the Legislative Assembly elections in Puducherry, Kerala, and Assam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


