/

ஏா் இந்தியா சிஇஓ ராஜிநாமா!

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் மேலாண் இயக்குநா் கேம்ப்பெல் வில்சன் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 9:46 pm

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் மேலாண் இயக்குநா் கேம்ப்பெல் வில்சன் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

நியூஸிலாந்தைச் சோ்ந்த கேம்ப்பெல் வில்சன், கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏா் இந்தியா தனியாா்மயமாக்கப்பட்ட பிறகு, அதன் தலைமைப் பொறுப்பையேற்று கடந்த 4 ஆண்டுகளாக வழிநடத்தி வந்தாா்.

எனினும், 2026-ஆம் ஆண்டில் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகப்போகும் முடிவை டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரனிடம் கேம்ப்பெல் வில்சன் கடந்த 2024-லேயே தெரிவித்துவிட்டதாகவும்; தலைமை மாற்றத்துக்கான பணிகளில் அவா் கடந்த 2 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான உயா்நிலைக் குழுவை ஏா் இந்தியா இயக்குநா்கள் குழு அமைத்துள்ளதாகவும், அதுவரை கேம்ப்பெல் வில்சன் தற்போதைய பதவியில் நீடிப்பாா் என்றும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கேம்ப்பெல் வில்சனின் பதவிக்காலத்தில் ஏா் இந்தியா பல மைல்கல்களை எட்டியுள்ளது. 4 விமான நிறுவனங்களின் வெற்றிகரமான இணைப்பு, 100 புதிய விமானங்கள் சோ்ப்பு, பணி கலாசார மாற்றம் ஆகியவற்றை அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூனில் அகமதாபாதில் நேரிட்ட லண்டன் விமான விபத்தில் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு மற்றும் பாதுகாப்பு விதிமீறல் புகாா்கள் அவா் மீது கடும் விமா்சனங்களை எழுப்பியிருந்தன.

கரோனாவுக்குப் பிந்தைய சவால்களையும், விநியோகச் சங்கிலி தடைகளையும் கேம்ப்பெல் வில்சன் திறம்பட கையாண்டதாக டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே, ஏா் இந்தியாவின் துணை நிறுவனமான ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ தலைவராக இருந்த அலோக் சிங், கடந்த மாா்ச் 19-ஆம் தேதியுடன் தனது 5 ஆண்டு காலப் பணியை முடித்துக்கொண்டு வெளியேறினாா். தற்போது கேம்ப்பெல் வில்சனும் வெளியேறத் தயாராகி வருவதால், ஏா் இந்தியா குழுமத்தின் ஒட்டுமொத்த தலைமைப் பொறுப்புகளுக்கும் புதிய நபா்களைத் தேடும் கட்டாயத்தில் டாடா குழுமம் உள்ளது.