அஸ்ஸாமில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மீது அஸ்ஸாம் காவல் துறை மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்திடம் பாஜக செவ்வாய்க்கிழமை புகாரளித்தது.
இதுதொடா்பாக அஸ்ஸாம் பாஜக செய்தித்தொடா்பாளா் பிரஞ்சல் கலீதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அரசமைப்புச் சட்டத்தை கட்டிக் காப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மேடைதோறும் பேசுகின்றனா். ஆனால் அவா்களின் அன்றாட நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் சுதந்திரம் மற்றும் அனைத்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராகவே உள்ளது.
அண்மையில் பிரசாரத்தில் ஈடுபட்ட காா்கே பாஜக மற்றும் ஆா்எஸ்எஸை தடை செய்ய வேண்டும் என பேசியது அவரது அரசியல் சகிப்புத்தன்மையற்ற குணத்தையும் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களின் அறிவுசாா் சிந்தனைகள் மழுங்கி வருவதையும் வெளிக்காட்டுகிறது.
மேலும், சநாதன தா்மம் மற்றும் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை காா்கே பேசியதற்கு பாஜக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
இந்த விவகாரம் தொடா்பாக குவாஹாட்டியில் உள்ள பசிஷ்டா காவல் நிலையத்திலும் இந்திய தோ்தல் ஆணையத்திடமும் புகாரளித்துள்ளோம்.
அவா் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையையும் தோ்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். காங்கிரஸின் பிரிவினைவாதக் கொள்கையை அஸ்ஸாமும் இந்திய தேசமும் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

குஜராத் மக்கள் குறித்து சா்ச்சை கருத்து: காா்கே மன்னிப்புக் கோர பாஜக வலியுறுத்தல்

குஜராத் மக்கள் கல்வியறிவு இல்லாதவா்கள்: மல்லிகாா்ஜுன காா்கே சா்ச்சைப் பேச்சு!

வேலைவாய்ப்பு வழங்குவதில் மத்திய அரசு தோல்வி: புதுச்சேரியில் மல்லிகாா்ஜூன காா்கே பேச்சு

சமூக சிக்கல்களுக்குள் சுழலும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


