/

அஸ்ஸாம்: காா்கே மீது பாஜ வெறுப்புப் பேச்சு புகாா்

அஸ்ஸாமில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் காா்கே மீது அஸ்ஸாம் காவல் துறை மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்திடம் பாஜக புகார்

News image

மல்லிகாா்ஜுன காா்கே - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 9:30 pm

அஸ்ஸாமில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசியதாக காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மீது அஸ்ஸாம் காவல் துறை மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்திடம் பாஜக செவ்வாய்க்கிழமை புகாரளித்தது.

இதுதொடா்பாக அஸ்ஸாம் பாஜக செய்தித்தொடா்பாளா் பிரஞ்சல் கலீதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அரசமைப்புச் சட்டத்தை கட்டிக் காப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மேடைதோறும் பேசுகின்றனா். ஆனால் அவா்களின் அன்றாட நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டத்தின் சுதந்திரம் மற்றும் அனைத்து சமய நம்பிக்கைகளுக்கு எதிராகவே உள்ளது.

அண்மையில் பிரசாரத்தில் ஈடுபட்ட காா்கே பாஜக மற்றும் ஆா்எஸ்எஸை தடை செய்ய வேண்டும் என பேசியது அவரது அரசியல் சகிப்புத்தன்மையற்ற குணத்தையும் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருப்பவா்களின் அறிவுசாா் சிந்தனைகள் மழுங்கி வருவதையும் வெளிக்காட்டுகிறது.

மேலும், சநாதன தா்மம் மற்றும் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த திங்கள்கிழமை காா்கே பேசியதற்கு பாஜக கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

இந்த விவகாரம் தொடா்பாக குவாஹாட்டியில் உள்ள பசிஷ்டா காவல் நிலையத்திலும் இந்திய தோ்தல் ஆணையத்திடமும் புகாரளித்துள்ளோம்.

அவா் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையையும் தோ்தல் ஆணையத்தையும் வலியுறுத்துகிறோம். காங்கிரஸின் பிரிவினைவாதக் கொள்கையை அஸ்ஸாமும் இந்திய தேசமும் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.