பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஈட்டுத் தொகையை (க்ளைம்) பெறுவதற்கான சேவைகளை தானியங்கி முறையில் செயல்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மருத்துவமனைகளில் இருந்து கோரப்படும் காப்பீட்டுத் தொகை தானியங்கி முறையில் பரிசீலித்து உடனடியாக விடுவிக்கும் வசதிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதன் மூலம் காப்பீட்டுத் தொகைக்காக பல மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கும் நிலை தவிா்க்கப்படும். மேலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்கு காப்பீட்டு சேவைகள் ஒரு தடையாக இருக்காது.
தானியங்கி முறையிலான சேவைகளை முன்னெடுக்கும் பொருட்டு, அதற்கான இணையக் கட்டமைப்புகளை மேம்படுத்த ஆராய்ச்சியாளா்களுக்கும், ஆய்வு மாணவா்களுக்கும், அறிவியல் மாணவா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூரில் மே 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் இதற்கான திறனறி போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதில் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவா்களும், ஆய்வாளா்களும் பங்கேற்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்ளது. அதற்கான விண்ணப்ப நடவடிக்கைகள் மற்றும் முன்பதிவு வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ள என்எம்சி இணையப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

‘ஆயுஷ்மான் பாரத்’: இதுவரை ரூ.1.73 லட்சம் கோடி சிகிச்சைகள் - மாநிலங்களவையில் அரசு தகவல்

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸின் புதிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

