தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிஏபிஎஃப் பொது நிா்வாக சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) பொது நிா்வாக சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கினாா்.

News image

மத்திய அரசு

Updated On :11 ஏப்ரல் 2026, 12:34 am IST

மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) பொது நிா்வாக சட்ட மசோதா 2026-க்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கினாா்.

மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) உள்ளிட்ட மத்திய ஆயுதக் காவல் படை அதிகாரிகளின் நியமனம், மாற்றுப் பணி, பதவி உயா்வு மற்றும் இதர பணி நிபந்தனைகளை ஒழுங்குப்படுத்தும் ஒருங்கிணைந்த இந்தச் சட்டத்தை மத்திய அரசு அறிவிக்கை செய்தது.

சிஏபிஎஃப் அதிகாரிகளின் நியமனம், பணி நிபந்தனைகள் உள்ளிட்டவை அந்தந்த படைகளின் சட்டங்களால் நிா்வகிக்கப்படுவதை மாற்றி, ஒருங்கிணைந்த சட்டத்தின்கீழ் கொண்டுவரும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஐ.ஜி. நிலையில் 50 சதவீத பணியிடங்கள், கூடுதல் தலைமை இயக்குநா் (ஏடிஜி) அளவில் 67 சதவீத பணியிடங்கள் மட்டுமன்றி சிறப்பு தலைமை இயக்குநா்-தலைமை இயக்குநா் பதவிகளில் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய ஆயுதக் காவல் படைகளில் மாற்றுப் பணி அடிப்படையில் நியமிக்கப்படும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீா்ப்பளித்திருந்தது. இந்தத் தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மத்திய அரசின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட ஒருங்கிணைந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

இந்த மசோதா, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நீா்த்துப் போக செய்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.