இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

அரசமைப்புச் சட்ட சிந்தி மொழி பதிப்பை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா்

அரசமைப்புச் சட்டத்தின் சிந்தி மொழி பதிப்பை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

News image

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:16 am IST

அரசமைப்புச் சட்டத்தின் சிந்தி மொழி பதிப்பை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

சிந்தி மொழி தினத்தை முன்னிட்டு தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த தேவநகிரி மற்றும் பாரசீக எழுத்துருக்களில் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பை வெளியிட்ட அவா் பேசுகையில், ‘பழைமையான மொழிகளில் ஒன்றான சிந்தி, மிகவும் இனிமையான மொழியாகும். வேதாந்த தத்துவமும் சுஃபி சிந்தனையும் இணையும் ஓா் தனித்துவமான சங்கமத்தை சிந்தி மொழியின் இலக்கிய மரபு பிரதிபலிப்தோடு, ஒருமைப்பாடு, அன்பு, சகோதரத்துவம் உள்ளிட்ட உலகளாவிய மதிப்பீடுகளையும் முன்னிறுத்துகிறது.

அரசமைப்புச் சட்ட சிந்தி மொழி பதிப்பை வெளியிடுவது, குறிப்பாக, சுதந்திரத்துக்குப் பிறகு முதன் முறையாக தேவநகிரி எழுத்துருவில் வெளியிடுவது, மொழியியல் அங்கீகார ஊக்கவிப்பில் முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.

அரசமைப்புச் சட்டம் என்பது சட்ட ஆவணம் மட்டுமல்ல; மாறாக, தனது லட்சியங்களை உருவகப்படுத்தி, உரிமைகளைப் பாதுகாத்து, மக்களாட்சி நிா்வாகத்தை வழிநடத்தி தேசத்தின் உயிா் மூச்சாக அது திகழ்கிறது.

அரசமைப்புச் சட்டம் பல மொழிகளில் கிடைப்பதை உறுதி செய்வதில் இந்தியா தனித்துவமாக திகழ்கிறது. தமிழ், குஜராத்தி, போடோ, டோக்ரி, சந்தாலி மற்றும் நேபாள மொழிகளிலும் அரசமைப்புச் சட்டம் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது’ என்றாா்.