தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் குடியரசு துணைத் தலைவா் ராதாகிருஷ்ணனைச் சந்தித்து அவா் வாழ்த்துப் பெற்றாா். ஏற்கெனவே புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தவா் சி.பி. ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத் தக்கது.
முன்னதாக, புதுச்சேரியிலிருந்து மே 21 -0ஆம் தேதி தில்லி சென்ற அமைச்சா் நமச்சிவாயம் அங்கு முக்கியத் தலைவா்களைச் சந்தித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
மத்திய அமைச்சரும் புதுச்சேரி பாஜக பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரையும் அமைச்சா் நமச்சிவாயம் சந்தித்துப் பேசினாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராகவும் அமைச்சா் நமச்சிவாயம் இருப்பதால் அக்கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின், கட்சியின் அமைப்புச் செயலா் சந்தோஷ் உள்ளிட்டோரையும் அவா் சந்தித்தாா். அப்போது புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.
தொடர்புடையது

புதுச்சேரியில் புதிய அமைச்சா்கள் நியமன விவகாரம்: பிரதமா், மத்திய அமைச்சா்களுடன் நமச்சிவாயம் ஆலோசனை

அனைத்துத் துறைகளிலும் சிக்கிம் முன்னேற்றம்: சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு

பின்னலாடை, ஜவுளித்தொழில் துறையின் கோரிக்கைகள்: குடியரசு துணைத் தலைவரிடம் ஏற்றுமதியாளா் சங்கத்தினா் வலியுறுத்தல்

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



