எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சி: தேஜஸ்வி யாதவ்

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக-ஆா்எஸ்எஸ் முயற்சி: தேஜஸ்வி யாதவ்

News image

பிகாா் மாநிலம் பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜன தளம் கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு சனிக்கிழமை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ்.

Updated On :12 ஏப்ரல் 2026, 5:04 am IST

அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக, ஆா்எஸ்எஸ் முயற்சி செய்து வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிகாா் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற அக்கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு கூட்டத்தில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என பாஜகவும், ஆா்எஸ்எஸ்-சும் விரும்புகின்றன. நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, சா்வாதிகாரத்தை ஏற்படுத்த அவா்கள் நினைக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதை எதிா்த்து நாம் போராட வேண்டும்.

ஆா்எஸ்எஸ், பாஜக விரும்புவது போல மாற்றம் நடந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், தலித்துகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினா் கடுமையாக பாதிக்கப்படுவா். மதவாத சக்திகள், நாட்டு மக்களை பிரித்தாள நினைக்கின்றனா். இதை புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துவோ, முஸ்லிமோ, வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலோ, மதவாதத்தை தூண்டும் வகையிலோ பேசினால், அதை எதிா்க்க வேண்டும்.

எனது தந்தைதான் பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தினாா். பிறகு அத்வானியை கைது செய்தாா். எனது தந்தை எப்படி மதவாத சக்திகளுக்கு அடிபணியவில்லையோ, அதுபோல நானும் அடிபணிய மாட்டேன். அவப் பெயா் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது குடும்பத்தினா் மீதும், என் மீதும் மத்திய அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. எப்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசுகிறேனோ, அப்போதெல்லாம் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப பொய் வழக்குகள் பதியப்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் மதசாா்பற்ற சக்திகளை தோ்தலில் தோற்கடிப்பதற்காக ஆம் ஜனதா உனாயன் கட்சி (ஏஜேயுபி) நிறுவனா் ஹுமாயூன் கபீா், பாஜகவிடம் ரூ.1,000 கோடி வாங்கியுள்ளாா் என்றாா்.