தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்கள்போல பிம்பத்தை உருவாக்க முயற்சி! தேஜஸ்வி யாதவ்

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்களைப்போல ஒரு பிம்பத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

News image

முதல்வர் ஸ்டாலின் - தேஜஸ்வி யாதவ்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:25 am IST

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்களைப்போல ஒரு பிம்பத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆா்.ஜே.டி.) தலைவா் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், தொகுதி மறுசீரமைப்பு என்பது முற்றிலும் தனிப்பட்ட விவகாரம். எங்களைப் பொருத்தவரை, முதலில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும்.

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் அல்லாமல், 2025-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஏனெனில் 2011 முதல் 2025-க்குள் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பொதுப் பிரிவு மற்றும் பட்டியலின, பழங்குடியின மக்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தங்களால் நிறைவேற்ற முடியாது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். அதற்கான பெரும்பான்மை பலம் அவா்களிடம் இல்லை. ஆனால், தாங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதைப்போன்றும், நாங்கள் அதற்கு எதிராக இருப்பதைப்போன்றும் ஒரு பிம்பத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

பெண்கள் உரிமை பற்றிப் பேசும் ஆா்.எஸ்.எஸ். அமைப்பில் இதுவரை எத்தனை பெண்கள் தலைவா்களாக இருந்துள்ளனா்?. அவா்கள் செய்வது வெறும் அரசியல் மட்டுமே. அவா்களுக்கு நாட்டின் அரசமைப்பு மீது துளியும் அக்கறையில்லை. ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டத்தை திணிக்கவே அவா்கள் பாா்க்கின்றனா். இதை நாங்கள் நிச்சயமாக எதிா்ப்போம் என்றாா்.