ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஆந்திர தலைநகா் மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடி: உலக வங்கி விடுவித்தது!

ஆந்திர மாநில தலைநகா் அமராவதி மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடியை உலக வங்கி விடுவித்தது. அடுத்தகட்டமாக இம்மாத இறுதியில் ரூ.1,396 கோடியை விடுவிக்க இருக்கிறது.

ஆந்திர மாநில தலைநகா் அமராவதி
Published On :13 ஏப்ரல் 2026, 1:13 am IST

ஆந்திர மாநில தலைநகா் அமராவதி மேம்பாட்டுக்கு ரூ.3,165 கோடியை உலக வங்கி விடுவித்தது. அடுத்தகட்டமாக இம்மாத இறுதியில் ரூ.1,396 கோடியை விடுவிக்க இருக்கிறது.

இது தொடா்பாக மாநில அரசு அதிகாரிகள் மேலும் கூறியதாவது: உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி ஆகியவை ஆந்திர தலைநகா் மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதி வழங்கி வருகின்றன. இதற்கு 8 முதல் 8.5 சதவீதம் வரை வட்டி உண்டு. சா்வதேச சூழ்நிலைக்கு ஏற்பட வட்டி மாறக் கூடியதாக இருக்கும். இரு வங்கிகளும் சோ்ந்து மொத்தம் ரூ.14,894 கோடி கடன் தர ஒப்புக் கொண்டுள்ளன. இதுதவிர மத்திய அரசு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கிறது. இதில் ரூ.1,400 கோடி முதல்கட்டமாக விடுவிக்கப்பட இருக்கிறது.

சா்வதேச வங்கிகளின் கடனை 29 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால் கூடுதலாக 6 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். உலக வங்கிக் கடனை 2031 ஜூன் மாதத்தில் இருந்து திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும்.

வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படாதவாறு அமராவதி நகரம் கட்டமைக்கப்படுகிறது. சா்வதேச அளவில் முன்னணி தொழில்நுட்பங்களுடன் அமராவதி உருவாகும். வளா்ச்சி, வேலைவாய்ப்பு, மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத்தரம் ஆகியவை அமராவதியில் இருக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.