/

தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்

புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லெவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) - DPS

Updated On :12 ஏப்ரல் 2026, 9:41 am

புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லெவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,

பான்மொழிகளாக நீண்டுள்ள போஸ்லேவின் அசாத்தியமான இசைப் பயணம், இந்தியப் பண்பாட்டு மரபைச் செழுமைப்படுத்தியிருப்பதோடு, உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற இதயங்களைத் தொட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தியா கண்ட மிகச் சிறந்த, பன்முகத்தன்மை வாய்ந்த குரல்களில் ஒன்றான ஆஷா போஸ்லே மறைவால் நான் ஆழ்ந்த துயரம் அடைந்தேன்.

போஸ்லேவின் குரல் மெல்லிசை முதல் துடிப்பான பாடல்கள் வரை காலத்தால் அழியாத மேன்மையைக் கொண்டுள்ளது. அவருடன் நான் நடத்திய உரையாடல்களின் நினைவுகளை என்றென்றும் பொக்கிஷமாகப் போற்றுவேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

அவர் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து ஊக்கமளிப்பவர். அவரது பாடல்கள் மக்களின் வாழ்வில் என்றென்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

லேசான மாரடைப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆஷா போஸ்லே இன்று காலை மும்பையில் காலமானார்.

Summary

Prime Minister Narendra Modi expressed his condolences on the passing of renowned singer Asha Bhosle.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.