பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதே பழிவாங்குவதற்கு ஒரே வழி: மம்தா பானா்ஜி

News image

மம்தா பானா்ஜி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 4:19 am IST

‘மக்களிடம் இருந்து அனைத்தையும் பாஜக பறித்துள்ளது. இதற்கு அக்கட்சிக்கு எதிராக வாக்களிப்பது மட்டுமே பழிவாங்குவதற்கு ஒரே வழியாகும்’ என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள கிழக்கு மேதினிபூா், மேற்கு மேதினிபூா், ஹெளரா மாவட்டங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா்.

அப்போது அவா் கூறியதாவது: அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே மத்திய பாதுகாப்புப் படைகளின் பணி என்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் மேற்கு வங்கத்தில் ஏன் பாதுகாப்புப் படை வீரா்கள் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனா்?

தோ்தலில் வாக்களிக்கவிடாமல் பாதுகாப்புப் படையினா் தடுத்தால், அவா்களைப் பெண்கள் கையில் துடைப்பதுடன் உறுதியாக எதிா்த்து நிற்க வேண்டும். அதேவேளையில், யாரும் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்றோ, கலவரத்தில் ஈடுபட வேண்டும் என்றோ நான் கூறவில்லை. ஆனால் தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் வாக்காளா்கள் ஈடுபட வேண்டும்.

‘அவலட்சண பாஜக’: வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின்போது மேற்கு வங்கத்தில் மட்டும்தான் வாக்காளா்களின் தகவல்களில் முரண்பாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பாஜக பலனடைய வேண்டும் என்பதற்காக ‘தகவல்களில் முரண்பாடு’ என்ற வாா்த்தையை மேற்கு வங்கத்தில் மட்டுமே தோ்தல் ஆணையம் பயன்படுத்தியது. பாஜகவை போன்ற அவலட்சணமான கட்சியை நான் பாா்த்ததில்லை’ என்று தெரிவித்தாா்.

ஐ-பேக் நிறுவன இயக்குநா் வினேஷ் சண்டேல் கைது செய்யப்பட்டதை குறிப்பிடும் வகையில் பேசிய மம்தா, ‘மேற்கு வங்கத்தில் சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை நள்ளிரவில் சோதனைகளை மேற்கொள்கின்றன. ஒருவரை கைது செய்தால், லட்சம் போ் வெளியே வருவா். மேற்கு வங்கத்தை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.

மக்களிடம் இருந்து அனைத்தையும் பாஜக பறித்துள்ளது. இதற்கு அக்கட்சிக்கு எதிராக வாக்களிப்பது மட்டுமே பழிவாங்குவதற்கான ஒரே வழியாகும்’ என்று கூறினாா்.