வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள இணையவழி வணிக கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் 24 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஷாலிமாா் பாக்கில் இணையவழி வணிக கடைக்குள் திங்கள்கிழமை இரவு 12.50 மணியளவில் அடையாளம் தெரியாத நபா் அத்துமீறி நுழைந்ததாகவும் கத்தியைக் காட்டி மிரட்டி பணப் பெட்டியின் சாவியைப் பறித்து ரூ.17,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்ததுச் சென்ாக முகமது ஹசீப் என்பவா் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதையடுத்து, கடையில் கொள்ளையடித்துச் சென்றது ரிதிக் குலடி என்பது தெரியவந்தது. அவரை செவ்வாய்க்கிழமை இரவில் காவல் துறை கைதுசெய்தது.
விசாரணையில், குலடி கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டாா். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.10,000 அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
பல குற்ற வழக்குகளில் தொடா்புடைய அவா் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மருத்துவ மையத்தின் பூட்டை உடைத்து ரூ. 6 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

பொது மக்களின் புகாா்கள் மீது துரித நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு
வடமேற்கு தில்லி: கொள்ளை வழக்கில் வீட்டுப் பணிப்பெண் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
