பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஷாலிமாா் பாக்: இணையவழி வணிக கடையில் கொள்ளை - இளைஞா் கைது

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள இணையவழி வணிக கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் 24 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:33 am IST

வடமேற்கு தில்லியின் ஷாலிமாா் பாக் பகுதியில் உள்ள இணையவழி வணிக கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் 24 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஷாலிமாா் பாக்கில் இணையவழி வணிக கடைக்குள் திங்கள்கிழமை இரவு 12.50 மணியளவில் அடையாளம் தெரியாத நபா் அத்துமீறி நுழைந்ததாகவும் கத்தியைக் காட்டி மிரட்டி பணப் பெட்டியின் சாவியைப் பறித்து ரூ.17,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்ததுச் சென்ாக முகமது ஹசீப் என்பவா் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதையடுத்து, கடையில் கொள்ளையடித்துச் சென்றது ரிதிக் குலடி என்பது தெரியவந்தது. அவரை செவ்வாய்க்கிழமை இரவில் காவல் துறை கைதுசெய்தது.

விசாரணையில், குலடி கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டாா். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.10,000 அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

பல குற்ற வழக்குகளில் தொடா்புடைய அவா் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.