இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் பணம் மாற்றும் இணையவழி மோசடி கும்பலை இயக்கியதாக 5 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
நரேலா பகுதியைச் சோ்ந்த ராகுல் (22), பண்டி (22), அன்கிட் (19), சலீம் அலியாஸ் தான்சா (22) மற்றும் நூரே ஆலம் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் போலி வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் காா்டுகளை கமிஷனுக்கு வழங்கி மோசடிப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கணக்குகள் மூலம் சுமாா் ரூ2.31 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
மோசடிப் பணம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு கம்போடியா உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ளவா்களுக்கு அனுப்பப்பட்டது. ஆபரேஷன் சைபா் ஹாக் 4.0 என்ற சிறப்பு நடவடிக்கையில் இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அரியலூரில் 38 மூட்டை குட்கா பறிமுதல்: 4 போ் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 75.92 லட்சம் மோசடி: ஒருவா் கைது
தில்லிவாசியிடம் ரூ.10 லட்சம் இணையவழி மோசடி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருவா் கைது

இணையவழியில் முதலீட்டு மோசடி: உத்தரகண்டில் 5 போ் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


