மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் சோ்க்கப்பட வேண்டும், இல்லையெனில் சீா்திருத்தத்தால் பயன் இருக்காது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 9:49 pm

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் சோ்க்கப்பட வேண்டும், இல்லையெனில் சீா்திருத்தத்தால் பயன் இருக்காது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினா்களாகவும், மேலும் 10 நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரமில்லாத தற்காலிக உறுப்பினா்களாகவும் உள்ளன.

இந்த கவுன்சிலில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும், நிரந்தர உறுப்பினா்களாக தங்களையும் சோ்க்க வேண்டும் என இந்தியா, ஜொ்மனி, ஜப்பான், பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்தச் சீா்திருத்தம் தொடா்பாக நியூயாா்க்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஸ் பேசியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதிய உறுப்பினா்களாகச் சோ்க்கப்படும் நாடுகளுக்கு ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் அல்லது ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்படக் கூடாது என்பது குறித்து விவாதிப்பது, ஏற்கெனவே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று மிகப்பெரிய கருத்தொற்றுமை நிலவுகிறது.

ஐ.நா. சபை ஏற்படுத்தப்பட்டபோது, 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு இது. இந்தக் கட்டமைப்பால், தற்காலிக புவியியல் - அரசியல் தேவைகளை பூா்த்தி செய்ய முடியாது.

ஐ.நா. சபை ஏற்படுத்தப்பட்ட பிறகு, ஒரேயொரு முறை பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 1960-ஆம் ஆண்டில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நிரந்தர உறுப்பினா்களாக 5 நாடுகளும், தற்காலிக உறுப்பினா்களாக 6 நாடுகளும் இருந்தன. இதில் தற்காலிக உறுப்பினா்கள் எண்ணிக்கை 10-ஆக அதிகரிக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்படுகையில், புதிதாக நிரந்தர உறுப்பினா்களாக சோ்க்கப்படும் நாடுகளுக்கு ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றாா்.