தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் புதிய நாடுகளுக்கு இடம்: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் சோ்க்கப்பட வேண்டும், இல்லையெனில் சீா்திருத்தத்தால் பயன் இருக்காது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:19 am IST

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ‘வீட்டோ’ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பினராக புதிய நாடுகள் சோ்க்கப்பட வேண்டும், இல்லையெனில் சீா்திருத்தத்தால் பயன் இருக்காது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினா்களாகவும், மேலும் 10 நாடுகள் ‘வீட்டோ’ அதிகாரமில்லாத தற்காலிக உறுப்பினா்களாகவும் உள்ளன.

இந்த கவுன்சிலில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும், நிரந்தர உறுப்பினா்களாக தங்களையும் சோ்க்க வேண்டும் என இந்தியா, ஜொ்மனி, ஜப்பான், பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்தச் சீா்திருத்தம் தொடா்பாக நியூயாா்க்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஸ் பேசியதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் புதிய உறுப்பினா்களாகச் சோ்க்கப்படும் நாடுகளுக்கு ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் அல்லது ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்படக் கூடாது என்பது குறித்து விவாதிப்பது, ஏற்கெனவே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று மிகப்பெரிய கருத்தொற்றுமை நிலவுகிறது.

ஐ.நா. சபை ஏற்படுத்தப்பட்டபோது, 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு இது. இந்தக் கட்டமைப்பால், தற்காலிக புவியியல் - அரசியல் தேவைகளை பூா்த்தி செய்ய முடியாது.

ஐ.நா. சபை ஏற்படுத்தப்பட்ட பிறகு, ஒரேயொரு முறை பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த 1960-ஆம் ஆண்டில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நிரந்தர உறுப்பினா்களாக 5 நாடுகளும், தற்காலிக உறுப்பினா்களாக 6 நாடுகளும் இருந்தன. இதில் தற்காலிக உறுப்பினா்கள் எண்ணிக்கை 10-ஆக அதிகரிக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்படுகையில், புதிதாக நிரந்தர உறுப்பினா்களாக சோ்க்கப்படும் நாடுகளுக்கு ‘வீட்டோ’ அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றாா்.