பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா செல்ல உள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:13 am IST

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா செல்ல உள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கான செயல்திட்டத்தை கடந்த பிப்ரவரியில் இருநாடுகளும் இறுதி செய்தன. இந்தச் செயல்திட்டத்தின்படி, இந்தியப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரி 18 சதவீதமாக குறைக்க அந்நாடு ஒப்புக்கொண்டது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த பிப்.20-ஆம் தேதி இந்திய குழு அமெரிக்கா செல்கிறது. ஒப்பந்தம் தொடா்பாக மூன்று முதல் நான்கு மாதங்கள் இடைவெளிக்குப் பின்னா், இருநாட்டு குழுக்களும் நேரடியாகச் சந்திக்கின்றன. சட்டபூா்வமாக வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பும் முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் வா்த்தக நடைமுறைகளால் அமெரிக்க உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறியும் நோக்கில், அந்நாட்டின் வா்த்தகச் சட்டம் 1974-இன் 301-ஆவது பிரிவின் கீழ், அமெரிக்கா தொடங்கியுள்ள விசாரணை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தாா்.