காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா செய்தியாளர் சந்திப்பில், “எதிர்ப்பு இடஒதுக்கீட்டுக்கு அல்ல; தொகுதி மறுவரையறைக்குத்தான்” என தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 283 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து 850 ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் இன்று அறிமுகம் செய்துள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா, “இந்த மசோதாவால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று பிரதமர் கூறினாலும் மசோதாவில் அது தெளிவாக இல்லை. ஆகையால், அந்த மசோதாவை எப்படி நம்ப முடியும்? அதில் பல சந்தேகங்கள் உள்ளன. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு முழு உடன்பாடு உள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் அதற்கு ஆதரவளிக்கின்றனர். அதனால்தான் 2023 ஆம் ஆண்டு அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தற்போது புதிய சில அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தொகுதி மறுவரையறை பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும், எதிர்க்கட்சியினரின் தொகுதிகளைச் சீர்குலைத்து, தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்கும் வகையில் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகின்றது.
இந்த நடைமுறையில் முறைகேடு செய்யப்படலாம் என்பதுதான் எதிர்க்கட்சியின் கவலை. எனவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இடங்களை சுமார் 850 ஆக அதிகப்படுத்தும் திட்டத்துக்கும், எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் இந்தச் செயலுக்கும் மட்டுமே எதிர்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
Summary
Congress MP Rajiv Shukla has stated that the opposition is not against reservation, but rather against constituency delimitation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை எம்.பி. முயற்சியால் 6 பேருக்கு ரூ. 11.60 லட்சம் மருத்துவ உதவி!

தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் முதல்வா் ரங்கசாமி மீது கோபம்! வெ. வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு!

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட மனுக்கள் முடித்துவைப்பு

ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் கட்சியினர் மலரஞ்சலி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




