வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

எதிர்ப்பு இடஒதுக்கீட்டுக்கு அல்ல; தொகுதி மறுவரையறைக்கே: காங்கிரஸ்

எதிர்ப்பு இடஒதுக்கீட்டுக்கு அல்ல; தொகுதி மறுவரையறைக்குத்தான் என காங்கிரஸ் தெரிவித்தது குறித்து...

News image

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா - IANS

Updated On :16 ஏப்ரல் 2026, 12:23 pm

காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா செய்தியாளர் சந்திப்பில், “எதிர்ப்பு இடஒதுக்கீட்டுக்கு அல்ல; தொகுதி மறுவரையறைக்குத்தான்” என தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 283 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து 850 ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் இன்று அறிமுகம் செய்துள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா, “இந்த மசோதாவால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று பிரதமர் கூறினாலும் மசோதாவில் அது தெளிவாக இல்லை. ஆகையால், அந்த மசோதாவை எப்படி நம்ப முடியும்? அதில் பல சந்தேகங்கள் உள்ளன. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு முழு உடன்பாடு உள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் அதற்கு ஆதரவளிக்கின்றனர். அதனால்தான் 2023 ஆம் ஆண்டு அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தற்போது புதிய சில அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தொகுதி மறுவரையறை பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும், எதிர்க்கட்சியினரின் தொகுதிகளைச் சீர்குலைத்து, தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்கும் வகையில் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகின்றது.

இந்த நடைமுறையில் முறைகேடு செய்யப்படலாம் என்பதுதான் எதிர்க்கட்சியின் கவலை. எனவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இடங்களை சுமார் 850 ஆக அதிகப்படுத்தும் திட்டத்துக்கும், எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் இந்தச் செயலுக்கும் மட்டுமே எதிர்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.

Summary

Congress MP Rajiv Shukla has stated that the opposition is not against reservation, but rather against constituency delimitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.