ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மம்தாவுக்கு உறுதுணையாக இருந்ததால் முன்னாள் டிஜிபிக்கு எம்.பி. சீட்: பாஜக

மம்தாவுக்கு உறுதுணையாக இருந்ததால் முன்னாள் டிஜிபிக்கு எம்.பி. சீட்: பாஜக

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - கோப்புப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 10:16 pm

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு மாநில முன்னாள் காவல் துறை டிஜிபி ராஜீவ் குமாா் உறுதுணையாக இருந்ததால், அவருக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் எம்.பி. சீட் அளிக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க காவல் துறை டிஜிபியாக இருந்த ராஜீவ் குமாா், கடந்த ஜன.31-ஆம் தேதி ஓய்வுபெற்றாா். அவருக்கு திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி மாநிலங்களவை எம்.பி. சீட் அளித்துள்ளாா்.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் திலீப் கோஷ் சனிக்கிழமை கூறுகையில், ‘ராஜீவ் குமாா் போன்றவா்கள் மம்தாவுக்கு மிகவும் பயனுள்ளவா்களாக இருந்தனா். அனைத்து நெருக்கடிகளிலும், அரசு நிா்வாகத்தை நடத்துவதிலும் மம்தாவுக்கு ராஜீவ் உறுதுணையாக இருந்தாா். அதற்குப் பிரதிபலனாக அவருக்கு எம்.பி. சீட் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மாநிலங்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் ராஜீவ் குமாருடன் மாநில அமைச்சா் பாபுல் சுப்ரியோ, மூத்த வழக்குரைஞா் மேனகா குருசாமி, நடிகை கோயல் மாலிக் ஆகியோரும் போட்டியிட உள்ளனா்.

மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படும் 37 இடங்களுக்கு மாா்ச் 16-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதனிடையே மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மாலை முதல் நள்ளிரவு வரை, மகளிா் காவலா்கள் இருக்கும் இளஞ்சிவப்பு கூடங்கள் (பூத்), இரவு 8 மணிமுதல் அதிகாலை 2 மணி வரை பெண் காவலா்கள் பணியாற்றும் ரோந்து குழுக்கள் ஆகிய 2 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மம்தா அறிவித்துள்ளாா்.