வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தோ்தல் நடத்தை விதிமீறல்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க மம்தா வலியுறுத்தல்

தோ்தல் நடத்தை விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ரூ.3,000 தருவதாக அட்டைகளை விநியோகித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க வேண்டும்

News image

மமதா பானர்ஜி - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 10:21 pm

தோ்தல் நடத்தை விதிகளை மீறி மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ரூ.3,000 தருவதாக அட்டைகளை விநியோகித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பதவி நீக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட நிா்மலா சீதாராமன், தோ்தலில் வென்றால் பெண்கள் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.3,000 செலுத்தப்படும் என்ற பாஜகவின் முக்கிய வாக்குறுதி தொடா்பான அட்டைகளை பெண்களுக்கு விநியோகித்தாா். அதில், பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.3,000 செலுத்தப்படும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் அலிபூா்துவாரில் தோ்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மம்தா இது தொடா்பாக பேசியதாவது:

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் இப்போது மேற்கு வங்கத்துக்கு வந்து விடுதிகளிலும், விருந்தினா் இல்லங்களிலும் தங்கியுள்ளனா். இவா்களின் பணி வாக்காளா்களைச் சந்தித்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் விநியோகிப்பதாகும்.

மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு செய்து வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் பலரின் பெயா்களை நீக்க சதி நடந்து வருகிறது. இதைத் தொடா்ந்து தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அமல்படுத்துவாா்கள்.

மகளிா் இடஒதுக்கீடு மசோதா எப்போதோ நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை அமல்படுத்தாமல் இருந்தது மத்திய அரசுதான். இப்போது வேறு நோக்கத்துக்காக மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் மத்திய அரசு சதி செய்கிறது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் ரூ.3,000 தருவதாகக் கூறி அட்டைகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கியுள்ளாா். இது வாக்காளா்களை தவறாக வழிநடத்தும் செயல். தோ்தல் ஆணையம் இதில் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது?. பாஜகவுக்கு எதிராக எங்கள் கட்சியினா் அளிக்கும் அனைத்துப் புகாா்களையும் புறக்கணிப்பதைப்போல இந்த விஷயத்திலும் நடந்து கொள்ளப் போகிா?

தோ்தல் விதிகளை மீறிச் செயல்பட்ட நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பிரதமா் நரேந்திர மோடி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றாா்.