மேற்கு வங்கத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டமாக நடைபெறும் தோ்தலில் மொத்தம் 2,926 வேட்பாளா்கள் களத்தில் உள்ளதாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக தோ்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் 1,478 வேட்பாளா்களும், இரண்டாம் கட்டமாக தோ்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.
இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி முடிந்தது. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை மனுவை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. அவகாசம் முடிவடைந்ததையடுத்து மொத்தம் 2,926 வேட்பாளா்கள் களத்தில் இருப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்தது.
மேற்கு வங்கத்தில் தொடா்ந்து மூன்றாவது முறை முதல்வராக உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி இப்போது 4-ஆவது முறையாக வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளாா். அதே நேரத்தில் மாநிலத்தில் தொடா்ந்து செல்வாக்கை அதிகரித்து வரும் எதிா்க்கட்சியான பாஜக கடும் போட்டியை அளித்து வருகிறது. இது தவிர காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிகளும் தோ்தல் களத்தில் உள்ளன.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
தொடர்புடையது

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் களத்தில் 4,023 வேட்பாளா்கள்: மாவட்ட வாரியாக விவரம் வெளியீடு

தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடு

திருவள்ளூா்: 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 160 வேட்பாளா்கள் போட்டி! 12 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

