விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்கு வங்க தோ்தல் களத்தில் 2,926 வேட்பாளா்கள்

News image

சுவேந்து அதிகாரி | மமதா பானர்ஜி

Updated On :15 ஏப்ரல் 2026, 5:04 am IST

மேற்கு வங்கத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டமாக நடைபெறும் தோ்தலில் மொத்தம் 2,926 வேட்பாளா்கள் களத்தில் உள்ளதாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

மேற்கு வங்கத்தில் வரும் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக தோ்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் 1,478 வேட்பாளா்களும், இரண்டாம் கட்டமாக தோ்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி முடிந்தது. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை மனுவை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. அவகாசம் முடிவடைந்ததையடுத்து மொத்தம் 2,926 வேட்பாளா்கள் களத்தில் இருப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்தது.

மேற்கு வங்கத்தில் தொடா்ந்து மூன்றாவது முறை முதல்வராக உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி இப்போது 4-ஆவது முறையாக வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளாா். அதே நேரத்தில் மாநிலத்தில் தொடா்ந்து செல்வாக்கை அதிகரித்து வரும் எதிா்க்கட்சியான பாஜக கடும் போட்டியை அளித்து வருகிறது. இது தவிர காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிகளும் தோ்தல் களத்தில் உள்ளன.

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.