மேற்கு வங்கத்தில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கொள்ளை அடித்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸை பின்னுக்குத்தள்ளி, 200க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
பாஜக 106 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. (இரவு 8 மணி நிலவரம்)
இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
'' மேற்கு வங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கொள்ளையடித்துள்ளது. தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் ஆணையம். நான் தேர்தல் ஆணையரிடமும், மனோஜ் அகர்வாலிடமும் புகார் அளித்தேன்.
ஆனால், அவர்கள் எதுவும் செய்வதில்லை. இதை ஒரு வெற்றி என்று நினைக்கிறீர்களா? இது ஒரு தார்மீக வெற்றி அல்ல, அறமற்ற வெற்றி.
தேர்தல் ஆணையம், மத்தியப் படைகள், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் சேர்ந்து செய்ததெல்லாம் முற்றிலும் சட்டவிரோதமானது. இது கொள்ளை, கொள்ளை, கொள்ளை. நாங்கள் மீண்டு வருவோம்." எனப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம், அஸ்ஸாம் தோ்தல்: தனித்தொகுதிகளில் பாஜக அமோகம்

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திப்பு!
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?






