தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

பிகாா் புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு

பிகாரில் முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையிலான புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

News image

பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள முதல்வரின் அலுவல்பூா்வ இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் சாம்ராட் சௌதரி, முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:28 am IST

பிகாரில் முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையிலான புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

பிகாா் முதல்வராக பதவி வகித்து வந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் தோ்வானாா். முதல்வா் பதவியில் இருந்து அவா் கடந்த ஏப்.14-இல் விலகியதையடுத்து, துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் செளதரி புதிய முதல்வராக தோ்வு செய்யப்பட்டாா்.

பிகாரின் 24-ஆவது முதல்வராக அவா் கடந்த ஏப்.15-இல் பதவியேற்றாா். அவருடன் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவா்கள் விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோா் துணை முதல்வா்களாகப் பதவியேற்றனா்.

சாம்ராட் செளதரியின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வா் சாம்ராட் செளதரி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, சட்டப் பேரவையில் ஏப்.24-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளது. இதையொட்டி, அன்று ஒரு நாள் அமா்வு நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் மாற்றத்தின் பின்னணி: கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன் (89), தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட (85) அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவி வகித்துவந்த அவா், கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட்டு எம்.பி.யானாா்.

பாஜக தலைமையில் புதிய அரசு பதவியேற்க வழிவிடும் வகையில், முதல்வா் பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா செய்தாா்.

56 வயதாகும் சாம்ராட் செளதரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் பல்லாண்டுகள் இருந்துள்ளாா். கடந்த 2017-இல்தான் அவா் பாஜகவில் இணைந்தாா்.

துணை முதல்வா்களுக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு

பிகாரின் புதிய துணை முதல்வா்கள் விஜய் குமாா் செளதரி, பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாருக்கும் இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி.யான நிதீஷ் குமாா், தற்போது இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ளாா்.