பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி! திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்த பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டம்

News image

தில்லியில் காங்கிரஸார் போராட்டம் - PTI

Updated On :19 ஏப்ரல் 2026, 10:59 am

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்த பிரதமர் மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி பொய்யுரைப்பதாக காங்கிரஸார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், தில்லியில் இன்று பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமை அலுவலகத்தை நோக்கி போராட்டம் நடத்திய காங்கிரஸார், "பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஏன் முன்முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இன்றைய போராட்டத்தின் நோக்கம்.

தில்லியில் காங்கிரஸார் போராட்டம்

தில்லியில் காங்கிரஸார் போராட்டம் - PTI

2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பவற்றில் ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறது? அது ஏன் 2034 வரையில் ஒத்திவைக்கப்படுகிறது?

மகளிர் இடஒதுக்கீட்டைத் தவறாகப் பயன்படுத்தியும், தொகுதி மறுவரையறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏன் தாக்குகின்றனர்?

பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை காங்கிரஸுக்கு எதிரான சதி.

பெண்களை பாஜக ஏமாற்ற முயன்றது, பெண்களுக்கு எதிரான அவர்களின் விரோத நோக்கங்களைக் காட்டிவிட்டது.

மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுவரையறையைத் திணிப்பதே அவர்களின் உண்மையான நோக்கம். ஆனால், நாட்டில் மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்வரையில் காங்கிரஸ் ஓயாது.

2014 முதல் பிரதமர் மோடி, நாட்டை வழிநடத்தி வருகிறார். 2014 முதல் 2026 வரையில் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலத்தில் பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இந்த அரசுக்கு மகளிர் இடஒதுக்கீடு குறித்து அக்கறையில்லை. பாஜகவும் மோடியும் பெண்களுக்கு ஆதரவளிப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க மட்டுமே முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் பெண்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல. அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள்" என்று தெரிவித்தனர்.

Summary

Congress holds protest against PM Modi's address on Women's Reservation Bill setback in Lok Sabha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.