இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

2027-இல் ஜி20 செயற்கைக்கோள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்!

‘பருவநிலை, காற்று மாசு மற்றும் தட்பவெப்ப நிலையைக் கண்காணிப்பதற்கான ‘ஜி20’ செயற்கைக்கோள் வரும் 2027-இல் விண்ணில் ஏவப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.

News image

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:14 am IST

‘பருவநிலை, காற்று மாசு மற்றும் தட்பவெப்ப நிலையைக் கண்காணிப்பதற்கான ‘ஜி20’ செயற்கைக்கோள் வரும் 2027-இல் விண்ணில் ஏவப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள இந்திய அரசுப் பொறியாளா்கள் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), இந்திய ஏரோனாடிகல் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகளின் விஞ்ஞானிகள் மத்தியில் வி. நாராயணன் பேசியதாவது:

ஒரே ஏவுகலனில் (ராக்கெட்) எந்தவித மோதலுக்கும் உள்ளாகாமல் 100-க்கும் அதிகமான (104 செயற்கைக்கோள்கள்) செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

தற்போது, ஜி-20 நாடுகளின் பயன்பாட்டுக்காக (ஐரோப்பிய ஒன்றியம், ஆப்பிரிக்க ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட 21 நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு) ‘ஜி20’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இத் திட்டத்தில் இந்தியா முன்னணி பங்கை வகிக்கிறது. பருவநிலை, காற்று மாசு மற்றும் தட்பவெப்ப நிலையைக் கண்காணிப்பதற்கான இந்த செயற்கைக்கோள் வரும் 2027-இல் விண்ணில் ஏவப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

மேலும், ‘ஏராளமான வா்த்தக ரீதியிலான செயற்கைக்கோள் திட்டங்களையும் இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள் உள்பட வணிக ரீதியில் விண்ணில் செயற்கைக்கோள்களை ஏவும் நடவடிக்கைகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. வணிக ரீதியில் மிக அதிக எடைகொண்ட செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.

வரும் 2040-இல் விண்வெளி வீரா்களை நிலவுக்கு அனுப்புவதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இத் திட்டத்தை இந்தியா வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், விண்கலம் ஏவுதல் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் பயன்பாட்டு திட்டங்கள், மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சோ்ந்துவிடும்.

மேலும், ‘சமுத்ரயான்’ என்ற ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டத்துக்காக ஆழ்கடலின் உயா் அழுத்தத்தைத் தாங்கும் வகையிலான 100 மி.மீ. பருமனுடன் 2.2 மீட்டா் சுற்றளவுடன் கூடிய டைட்டேனியம் கலனை உருவாக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது’ என்றாா் அவா்.