கர்நாடகம் மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த கேலக்ஸிஸ்ஐ புத்தாக்க நிறுவனமானத்தால் ‘திருஷ்டி’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட முதன்மை செயற்கைக்கோளான ‘ஆப்டோசாா்’-ஐ ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் கலிஃபோா்னியாவில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம், நாட்டின் தனியார் விண்வெளித் துறை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தத் திட்டம், நாட்டின் வர்த்தக விண்வெளிச் சூழலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க உத்வேகமாக அமைந்துள்ளதுடன், ஒரு உலகளாவிய ஏவுதளத்தில் மேம்பட்ட உள்நாட்டுப் புத்தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
190 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைக்கோளான ‘ஆப்டோசாா் ’ஒரு இந்திய தனியார் நிறுவனத்தால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய செயற்கைக்கோள் ஆகும். மின்-ஒளியியல் (எலக்ட்ரோ-ஆப்டிகல்) சென்சாா் மற்றும் செயற்கை துளை ரேடாா் சென்சாா் ஆகிய இருவேறு பிம்பமாக்கல் தொழில்நுட்பங்களையும் ஒரே செயல்பாட்டுத் தளத்தில் ஒருங்கிணைக்கும் செயற்கைக்கோள் ஆகும். இது, விண்வெளித் தொழில்நுட்பத்தின் எல்லைகளை விரிவுபடுத்தும் புதிய தலைமுறை புத்தாக்க நிறுவனங்களில் கேலக்ஸிஸ்ஐ இடம்பெறச் செய்துள்ளது.
‘ஆப்டோசாா் ’செயற்கைக்கோள், புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, அதன் செயல்பாட்டைத் தொடங்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், இது, வழக்கமான பிம்பமாாக்கல் அமைப்பு முறைகளில் உள்ள குறைபாடுகளுக்குத் தீா்வளிப்பதுடன், பலதரப்பட்ட காலச் சூழல்களிலும் சீரான மற்றும் நிலையான தரவு சேகரிப்பை உறுதி செய்யும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
India’s private space sector reached a major milestone as Bengaluru-based startup GalaxEye Space successfully launched its flagship satellite, Mission Drishti,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிப்பை தொடங்கும் ‘ஐஸ்-ஐ’ நிறுவனம்

சின்மயா மிஷனின் ஆன்மிக சந்திப்பு!
இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

2027-இல் ஜி20 செயற்கைக்கோள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவா்!
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK




