/
நாடுகளுக்கு இடையிலான மோதல் மாறிவரும் தன்மை, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகும் சவால்களை எவ்வாறு எதிா்கொள்வது ஆகியவை குறித்து முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் பிரிட்டனில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டாா்.
பிரிட்டன் பாதுகாப்பு தயாா்நிலை துறை இணையமைச்சா் லூக் பொல்லாா்ட், இந்திய-பசிபிக் விவகாரங்கள் துறை இணையமைச்சா் சீமா மல்ஹோத்ரா ஆகியோருடன் லண்டனில் அனில் செளஹான் ஆலோசனை நடத்தினாா்.
இந்தியா-பிரிட்டன் கூட்டுறவை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன. இருநாட்டு பாதுகாப்பு தொழில் செயல்திட்டம், தொழில்நுட்பம், பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் இருநாட்டு ராணுவத்தினா் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

இந்திய ராணுவ தலைமைத் தளபதியின் பேச்சுக்கு பாகிஸ்தான் விமர்சனம்!

பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதி

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி







