பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

எந்த பயங்கரவாதத்திற்கும் நாடு அடிபணியாது: ஹரியாணா முதல்வர்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குல் பற்றி ஹரியாணா முதல்வர் கூறுவது..

News image

ஹரியாணா முதல்வர் நயாப் சைனி - DPS

Updated On :22 ஏப்ரல் 2026, 7:31 am

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி அஞ்சலி செலுத்தினார். புதிய இந்தியா எந்த பயங்கரவாதத்திற்கும் அடிபணியாது, பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற அனுமதிக்காது என அவர் கூறினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி,ஹரியாணா முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஹரியாணா முதல்வரின் எக்ஸ் பதிவில்,

பஹல்காமில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவத்தை இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

துயரத்திலும், உறுதியிலும் சரி குடிமக்களாகிய நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். இந்த புதிய இந்தியா எந்த பயங்கரவாதத்திற்கும் முன் அடிபணியாது. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது.

முன்னதாக, கடந்தாண்டு ஏப். 22 ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் வினய் நார்வால், இச்சம்பவத்தில் உயிரிழந்த 26 பேரில் ஒருவராவார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின்போது, ​​இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருந்த ராணுவ மற்றும் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்தன.

Summary

Haryana Chief Minister Nayab Singh Saini on Wednesday paid tributes to those killed in the Pahalgam terror attack, and said a New India will not bow down before any form of terror and never allow the designs of terrorists to succeed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.