மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) அன்று நடைபெற்றது. இதையடுத்து, 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப். 29 அன்று நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் இன்று காலை முதல் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 91.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இத்துடன், மேற்கு வங்கத்தில் 1.84 கோடி (90.92%) ஆண் வாக்காளர்கள், 1.76 கோடி (92.69%) பெண் வாக்காளர்கள் மற்றும் 465 (56.79%) மூன்றாம் பாலினத்தவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 91 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறை. இறுதியாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 84.72 சதவிகித வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
Summary
A voter turnout of 91.78 percent was recorded in the first phase of the Assembly elections held in West Bengal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

மேற்கு வங்கம்: 5 மணி வரை 89.99% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரம்!

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


